சென்னை: செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி குரூப் 2 , குரூப் 2ஏ தேர்வுகள் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இந்த தேர்வுகளுக்கு இன்று முதல் ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை நியமிக்க போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4 ஆகிய டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான தேதி கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.
jobs job tnpsc group 2a
அதில் 90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு ஜூலை 13 ஆம் தேதி நடைபெறுகிறது. 29 பணியிடங்களுக்கான குரூப் 1பி, குரூப் 1 சி ஆகிய தேர்வுகள் ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும். 2,030 காலி பணியிடங்களுக்கான குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறுகிறது.
டிப்ளமோ, ஐடிஐ அளவில் 730 பணியிடங்களுக்கான தொழில்நுட்பப்பிரிவு தேர்வுகள் வரும் நவம்பர் 17ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குரூப்-2 மற்றும் குரூப்2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றியுள்ளதாகத் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்நிலையில் குரூப் 2, குரூப் 2ஏ பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில்:
"விண்ணப்பதாரர்கள் இன்று (20-06-24) தொடங்கி அடுத்த மாதம் 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் கட்டணம் செலுத்துவதற்கும் 19ம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு வரும் செப்டம்பர் 14ம் தேதி நடைபெறும். கூடுதல் விவரங்களை அறிய https://www/tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments