நிறைய மக்கள் ஏதாவதொரு வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் தங்களுக்கென ஒரு சேமிப்பு கணக்கை வைத்திருப்பார்கள். அதில் வழக்கமாக பணத்தை செலுத்துவார்கள் அல்லது பெரிய அளவில் பணத்தை எடுப்பார்கள். ஆனால் பலருக்கும் இதில் பணம் எடுப்பதற்கும், செலுத்துவதற்கும் சில விதிகள் இருக்கின்றன என்பது தெரியவில்லை.
இந்த விதிகளை மீறினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். எனவே இந்த விதிகள் பற்றி மக்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
Do you know how much Cash can be deposited in your bank account Know the rules to avoid penalty
வருமான வரி விதிகள் படி சேமிப்பு கணக்கில் பணம் செலுத்துவதற்கு ஒரு வரம்பு உள்ளது. நீங்கள் அதிகபட்சம் ரூ.1 லட்சம் பணத்தை ஒரு நாளில் டெபாசிட் செய்யலாம்.
ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்தால் அதுபற்றி வருமான வரித்துறைக்கு தகவல் தரப்படும். ஆனால் கரன்ட் அக்கவுன்ட் இருந்தால் ரூ.50 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
கணக்குகளில் நடைபெறும் பரிவர்த்தனைகள் குறித்து நிதி நிறுவனங்கள் வருமான வரித் துறைக்கு தகவல் தர வேண்டும்.
சேமிப்பு கணக்குகள், நடப்புக் கணக்குகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பண பரிவர்த்தனைகளை கண்காணிக்க வருமான வரித்துறை இந்த வரம்பை நிர்ணயித்துள்ளது, இதனால் பணமோசடி, வரி ஏய்ப்பு, பிற சட்டவிரோத நிதி நடவடிக்கைகளை தடுக்க முடியும்.
பிரிவு 194A என்றால் என்ன?: ஒரு நிதியாண்டில் உங்கள் சேமிப்புக் கணக்கிலிருந்து ரூ.1 கோடிக்கு மேல் எடுத்தால், அதில் 2% டிடிஎஸ் கழிக்கப்படும். கடந்த மூன்று ஆண்டுகளாக ஐடிஆர் தாக்கல் செய்யாதவர்களுக்கு, 2% டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும், அதுவும் ரூ.20 லட்சத்துக்கு மேல் எடுத்தால் மட்டுமே, ஒரு நிதியாண்டில் ரூ.1 கோடி எடுத்தால், 5% டிடிஎஸ். அவர்கள் மீது விதிக்கப்படும்.
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 269ST இன் கீழ், ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் ஒருவர் ஒருவரின் கணக்கில் ரூ.2 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை டெபாசிட் செய்தால், அதற்கு அபராதம் விதிக்கப்படும். இருப்பினும், வங்கியில் இருந்து பணம் எடுப்பதற்கு இந்த அபராதம் விதிக்கப்படவில்லை. குறிப்பிட்ட வரம்புக்கு மேல் திரும்பப் பெறும்போது டிடிஎஸ் விலக்கு பொருந்தும்.
More From GoodReturns
இந்தியாவை அதிரவைக்கும் பான் கார்டு மோசடி.. மக்களே உஷார்..!
0 Comments