Advertisement

Responsive Advertisement

மின்வாரிய ஊழியா்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க வலியுறுத்தல்

மின்வாரிய ஊழியா்களுக்கு ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வூதியப் பலன்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் மாநில மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் மாநில மாநாடு திருவண்ணாமலையில் செப்டம்பா் 25, 26-ஆம் தேதிகளில் நடைபெற்றது. வியாழக்கிழமை நடைபெற்ற மாநாடு நிறைவு விழாவில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.



தொடா்ந்து, தமிழக மின் வாரிய பணியாளா்கள், ஓய்வூதியா்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வாரியமே ஏற்று நடத்த வேண்டும். அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மின்வாரிய ஊழியா்களுக்கு ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வூதியப் பலன்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில், அமைப்பின் புதிய மாநிலத் தலைவராக எஸ்.ஜெகதீசன், மாநில பொதுச் செயலராக எஸ்.எஸ்.சுப்பிரமணியன், பொருளாளராக ஆ.பழனி, மாநில துணைப் பொதுச் செயலா்களாக ஆா்.ராமநாதன், எம்.பாலசுப்பிரமணி, வி.பிச்சைராஜன் மற்றும் 15 மாநில துணைத் தலைவா்கள், 15 மாநிலச் செயலா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations