(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

கடன் சுமையில் தவிக்கிறீர்களா..? சுலபமாக மீண்டு வர சூப்பர் வழிகள்!



கடன்... ஒரு காலத்தில் பசியோடு இருந்தாலும் இருப்போம், ஆனால், கடன் வாங்கி சாப்பிட மாட்டோம் என்று வாழ்ந்த மக்கள், இன்று கிரெடிட் கார்டு என்று அழைக்கப்படும் கடன் அட்டை மூலம் ஆயிரக்கணக்கில் சாப்பாட்டுக்காக மட்டுமே செலவு செய்கிறார்கள் என் கிறது இந்தியக் கடன் சந்தை ரிப்போர்ட்.


அதுமட்டுமல்லாமல், பர்சனல் லோன், வீட்டுக் கடன், இ.எம்.ஐ கடன், நகைக் கடன், இந்தக் கடனை அடைக்க அந்தக் கடன் என மிக எளிதாகக் கிடைக்கிற கடன்கள் அனைத்தையும் வாங்கிவிடுகிறார்கள். ஒரு காலத்தில் சேமிப்பில் உலகிலேயே இந்தியர்கள்தான் முன்னுதாரணமாக இருந்தார்கள். அது இப்போது வெகுவாக மாறியிருக் கிறது என்பது வேதனை அளிக்கும் உண்மை.





ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இந்தியக் குடும்பங்களின் கடன் கடந்த 10 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 11% எனும் அளவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதே காலத்தில் அமெரிக்காவில் குடும்பங்களின் கடன் அளவு ஆண்டுக்கு சராசரியாக 6.6% என்ற அளவில்தான் அதிகரித்து வந்திருக்கிறது. அந்த வகையில், தற்போது இந்திய ஜி.டி.பி மதிப்பில் இந்தியக் குடும்பங்களின் கடன் 40.3 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது.


கடன் ஒருபக்கம் பொருளாதார வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் மக்களின் வாழ்க்கையை மிக மோசமான நிலைக் குத் தள்ளுகிறது என்பதையும் மறுக்க முடியாது. மக்களின் கடன் வாங்கும் நிலை பற்றியும், அவர்கள் கடன் வலையில் சிக்கிக்கொள்வது பற்றியும் நிதி ஆலோசகர் வித்யா பாலாவிடம் பேசினோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.





 


Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations