(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

ஓய்வூதியம் வாங்குவோருக்கு சூப்பர் வசதி.. இனி எங்கும் அலையத் தேவையில்லை!


 வீட்டிலிருந்தே இந்த வேலையை எளிதாக முடிக்கலாம்.. ஸ்மார்ட்போன் இருந்தால் மட்டும் போதும்.

Ad

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 9 Jun 2024, 1:35 pm

eps pensioners can now use facial authentication technology for digital life certificate submission

ஓய்வூதியம் வாங்குவோருக்கு சூப்பர் வசதி.. இனி எங்கும் அலையத் தேவையில்லை!

ஆயுள் சான்றிதழ்!

ஆயுள் சான்றிதழ்!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் 78 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தைத் தொடர ஒவ்வொரு ஆண்டும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். முன்னதாக அவர்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வங்கிகளுக்கு செல்ல வேண்டியிருந்தது. அதன் சவால்கள் காரணமாக சில குறைகள் ஏற்பட்டன.



டிஜிட்டல் சான்றிதழ்!

'வாழ்க்கையை எளிதாக்குவதை' மேம்படுத்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கடந்த 2015ஆம் ஆண்டில் அதன் ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை அறிமுகம் செய்தது. ஓய்வூதியதாரர்களிடமிருந்து பயோமெட்ரிக் அங்கீகாரத்தின் அடிப்படையில் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்கிறது.


நேரடியாகச் செல்ல வேண்டும்!

பயோமெட்ரிக் அடிப்படையிலான டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கு ஓய்வூதியதாரர் எந்தவொரு வங்கி, தபால் அலுவலகம், பொது சேவை மையம் அல்லது ஈ.பி.எஃப்.ஓ அலுவலகத்தின் கிளைக்கு நேரடியாக செல்ல வேண்டும். ஏனெனில் அங்கு கைரேகை மற்றும் கருவிழி பதிவு சாதனங்கள் இருக்கின்றன.



இனி அலைய வேண்டாம்!

வங்கி அல்லது தபால் அலுவலகத்திற்கு நேரடியாகச் செல்ல வேண்டியிருப்பதால் வயதானவர்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்க மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆகியவை முக அங்கீகார தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளன. இதன் மூலம் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆயுள் சான்றிதழைப் பெறலாம்.


இனி பிரச்சினை இல்லை!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இந்த தொழில்நுட்பத்தை 2022ஆம் ஆண்டின் ஜூலை மாதம் ஏற்றுக்கொண்டது. இது ஓய்வூதியதாரர்கள் தங்கள் வீடுகளிலிருந்து டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை சமர்ப்பிப்பதற்கான முற்றிலும் புதிய முறையை அறிமுகப்படுத்தியது. இது ஓய்வூதியதாரர்களுக்கு இந்த செயல்முறையை மிகவும் அணுகக்கூடியதாகவும் மலிவானதாகவும் ஆக்குகிறது.



ஸமார்ட்போன் போதும்!

வயதான காலத்தில் வங்கிகள், தபால் நிலையங்கள் போன்றவற்றிற்கு வெகு தூரம் பயணிப்பது, நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பது போன்ற தொந்தரவுகளை தவிர்க்க இந்த செயல்முறையை முடிக்க அவர்கள் எந்த ஆண்ட்ராய்டு அடிப்படையிலான ஸ்மார்ட்போனையும் பயன்படுத்தலாம். இந்த முறை ஓய்வூதியதாரர்களை அவர்களின் வீடுகளில் இருந்து ஸ்மார்ட்போன் கேமராவைப் பயன்படுத்தி முகத்தை ஸ்கேன் மூலம் அடையாளம் காண அனுமதிக்கிறது. முக அங்கீகார வசதியைப் பயன்படுத்தி ஆதார் தரவுத்தளத்திற்கு எதிராக இந்த சரிபார்ப்பு மேற்கொள்ளப்படுகிறது.


அதிகரிக்கும் எண்ணிக்கை!

2022-23ஆம் ஆண்டில் முக அங்கீகார தொழில்நுட்ப அடிப்படையிலான டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்கள் 2.1 லட்சம் ஓய்வூதியதாரர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இது 2023-24ஆம் ஆண்டில் 6.6 லட்சமாக உயர்ந்துள்ளது. இது இந்த தொழில்நுட்பத்தின் பயன்பாட்டில் ஆண்டுக்கு 200 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2023-24ஆம் ஆண்டில் 6.6 லட்சம் முக அடையாள அடிப்படையிலான டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்கள் ஆண்டில் பெறப்பட்ட மொத்த சான்றிதழ்களில் கிட்டத்தட்ட 10 சதவீதம்% ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.



எளிதாக முடிக்கலாம்!

முக அங்கீகார முறையைப் பயன்படுத்துவதற்கு தங்கள் ஸ்மார்ட்போன்களில் "ஆதார் ஃபேஸ் ஆர்டி" மற்றும் "ஜீவன் பிரமான்" ஆகிய இரண்டு ஆப்களை டவுன்லோடு செய்ய வேண்டும். இந்த பயன்பாடுகளுக்கான ஆபரேட்டர் சரிபார்ப்பு ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. வெற்றிகரமாக ஃபேஸ் ஸ்கேன் செய்வதை உறுதி செய்ய விரிவான வழிகாட்டுதல்கள் செயலிகளில் வழங்கப்பட்டுள்ளன. ஸ்கேன் முடிந்ததும் ஜீவன் பிரமான் ஐடி மற்றும் பிபிஓ எண்ணுடன் மொபைல் திரையில் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பு உறுதிப்படுத்தப்பட்டு வீட்டிலிருந்து எளிதாக செயல்முறையை முடிக்கிறது.



பிரபலமாகும் சேவை!

ஓய்வூதியதாரர்களின் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் நோக்கத்திற்காக இந்த புதுமையான மற்றும் வசதியான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது 2022ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மென்பொருளில் சேர்க்கப்பட்டது. இந்த புதிய முறையை அதிக அளவில் ஓய்வூதியம் பெறுவோரிடையே பிரபலப்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் அனைத்து கள அலுவலகங்களுக்கும் விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.


ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சி!

கள அலுவலகங்களில் மட்டுமின்றி 2023 ஜனவரி முதல் இந்தியா முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் நிதி ஆப்கே நிகாத் நிகழ்ச்சியின் போதும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த செயல்முறை தொடர்ந்து விளக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்த விரிவான வீடியோ EPFO @SOCIALEPFO அதிகாரப்பூர்வ YouTube தளத்தில் கிடைக்கிறது. இந்த முறையின் வசதி மேலும் ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கூறுகிறது.


Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations