மத்திய அரசு ஒவ்வொரு காலாண்டுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜி.பி.எஃப் உள்ளிட்ட பிராவிடண்ட் ஃபண்ட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அறிவிக்கிறது. இந்த நிலையில், ஜூலை - செப்டம்பர் காலாண்டுக்கான பிராவிடண்ட் ஃபண்ட் வட்டி விகிதங்களை மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
ஜெனரல் பிராவிடண்ட் ஃபண்ட் (GPF) திட்டத்துக்கு 7.1 சதவிகிதம் வட்டி வழங்கப்படும்.
இதேபோல மத்திய அரசு ஊழியர்களுக்கான மற்ற பிராவிடண்ட் ஃபண்ட் திட்டங்களுக்கும் 7.1 சதவிகித வட்டி வழங்கப்படும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்காக ஜெனரல் பிராவிடண்ட் ஃபண்ட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் அரசு ஊழியர்கள் தங்களது ஊதியத்தில் குறிப்பிட்ட பங்கை செலுத்த வேண்டும். இதற்கு அரசு அறிவித்தபடி வட்டி செலுத்தப்படும். ஒவ்வொரு காலாண்டுக்கும் மத்திய அரசால் வட்டி விகிதம் அறிவிக்கப்படும். அரசு ஊழியர்கள் பணிஓய்வு பெறும்போது ஃபண்டில் உள்ள பணம் செலுத்தப்படும்.
0 Comments