தமிழகத்துக்கு புதிய 2 வந்தே பாரத் ரயில்கள் - நேர அட்டவணை, கட்டணம் என்ன?
Modified: 01 Sep, 24 09:17 am
சென்னை: தமிழகத்தில் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட 2 வந்தே பாரத் ரயில்களின் சேவை குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வாரத்தில் புதன்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்படும். இதேபோல் மதுரை - பெங்களூரு இடையே வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும். இந்த ரயில்களின் வழக்கமான சேவை செப்.2-ம் தேதி தொடங்குகிறது.
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் பொருத்தவரை, எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு இந்த ரயில் (20627) புறப்பட்டு, அதேநாள் மதியம் 1.50 மணிக்கு நாகர்கோவிலை அடையும். மறுமார்க்கமாக, நாகர்கோவில் சந்திப்பில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு இந்த ரயில் (20628) புறப்பட்டு, அதேநாள் இரவு 11 மணிக்கு எழும்பூரை வந்தடையும். சென்னை எழும்பூர் - நாகர்கோவிலுக்கு சேர்கார் கட்டணம் ரூ.1,760. எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் கட்டணம் ரூ.3,240. உணவுக் கட்டணம் இதில் அடங்கும்.
இதேபோல் மதுரை - பெங்களூருவுக்கு மதுரையில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு ரயில் (20671) புறப்பட்டு, அதேநாள் மதியம் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்டை அடையும். மறுமார்க்கமாக, பெங்களூரு கண்டோன்மென்டில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்படும் ரயில் (20672), அதேநாள் இரவு 9.45 மணிக்கு மதுரையை அடையும். இந்த ரயிலில் உணவுக் கட்டணம் உட்பட சேர் கார் கட்டணம் ரூ.1,575. எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் கட்டணம் ரூ.2,865 ஆக நிர்ணியிக்கப்பட்டுள்ளது.
படம்; எஸ் .கிருஷ்ணமூர்த்தி
பிரதமர் பேசியது என்ன?: நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு இடையே வந்தே பாரத்ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் உட்பட பலமாநிலங்களில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
0 Comments