Published: Sat, 7 Sep 2024, 13:57 PM
பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீட்டு திட்டத்தை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்குத் தான் இந்தப் பதிவு. தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இந்தத் திட்டத்தில் உங்கள் மனைவியுடன் சேர்ந்து முதலீடு செய்வதன் மூலம் உத்தரவாதமான வட்டி வருமானத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த மாத வருமானம் நீங்கள் செய்யும் முதலீட்டை பொருத்து மாறுபடும்.
அதாவது நீங்கள் POMIS திட்டத்தில் 2 லட்ச ரூபாயை மொத்தமாக முதலீடு செய்தால் அதற்கென்று தனி வட்டி வருமானம் கிடைக்கும். அதுவே அதற்கு மேற்பட்ட தொகைக்கு நீங்கள் செய்யும் முதலீட்டிற்கு ஏற்றார் போல் வட்டி கிடைக்கும். இந்தப் பதிவில் உங்கள் மனைவியுடன் சேர்ந்து கூட்டுக் கணக்காக பணத்தை டெபாசிட் செய்யும்போது போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டத்தில் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
மாதாந்திர வருமானம் பெற ஒருமுறை முதலீடு: போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டத்தில் உங்களால் கூட்டுக் கணக்கையும் திறக்க முடியும். அதேபோல ஒற்றைக் கணக்கையும் திறந்து கொள்ளலாம். கூட்டுக் கணக்கில் 3 பேர் வரை இருக்கலாம். இதில் சிறந்த அம்சம் என்னவென்றால்.. நீங்கள் இந்த திட்டத்தில் ஒரே ஒருமுறை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். அதன் பின்பு 5 ஆண்டுகளுக்கு அதாவது இந்த திட்டம் முதிர்ச்சியடையும் வரை உங்களுக்கு அதிலிருந்து வட்டி வருமானம் வழங்கப்படும். தற்போது POMIS திட்டத்திற்கு 7.4 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
மாதாந்திர வருமானம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?: தனிநபர் கணக்கு வைத்திருப்பவர்கள் �
0 Comments