(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

"தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!




தமிழ்நாடு அரசின் குற்ற வழக்கு தொடர்வுத் துறை வேலை வாய்ப்பு; 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

07 Sep 2024 13:25 IST


தமிழ்நாடு அரசின் திருப்பூர் குற்ற வழக்குத் தொடர்வுத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 17.09.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 


அலுவலக உதவியாளர்


காலியிடங்களின் எண்ணிக்கை: 2


கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.



சம்பளம்: 15,700 – 58,100


தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://tiruppur.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 


முகவரி: உதவி இயக்குநர், குற்ற வழக்குத் தொடர்வுத் துறை, அறை எண். 319 & 320, 3-வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர் - 641604


விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.09.2024


இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://tiruppur.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.


“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations