புதுடில்லி: இந்திய பங்குச்சந்தைகள் நாளுக்கு நாள் உயர்வை சந்தித்து வரும் நிலையில், உ.பி., ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் முதலீடு செய்துள்ளதாக தேசிய பங்குச்சந்தை (என்எஸ்இ) கூறியுள்ளது.
இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த மாதம், பங்குச்சந்தையில் பதிவு செய்த முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டி சாதனை படைத்து உள்ளது. முதலீடு செய்பவர்களில் அதிகம் பேர் மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர்.
இரண்டாவது இடத்தில் 1.1 கோடி பேருடன்(11.1%) உ.பி.,யும்3வது இடத்தில் 88.5 லட்சம் பேருடன்(8.7 %) குஜராத்தும்
4வது இடத்தில் 59 லட்சம் பேருடன் ( 5.8 சதவீதம்) மேற்கு வங்கமும்
பங்குச்சந்தை முதலீடு செய்துள்ளவர்களில் 4 ல் ஒருவர் உ.பி., ராஜஸ்தான், மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள். மொத்த முதலீட்டாளர்களில் 48 சதவீதம் பேர் மஹாராஷ்டிரா, உ.பி., குஜராத், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள்.
0 Comments