வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து காட்டி வரும் ஆர்வத்தின் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் வரலாறு காணாத உச்சங்களுடன் வர்த்தகம் நீடித்து வருகிறது
மும்பை பங்குச் சந்தையில் இன்று (செப்.23) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 318.58 புள்ளிகள் உயர்ந்து 84,862.89 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி120.75 புள்ளிகள் உயர்ந்து 25,911.70 ஆக இருந்தது.
கடந்த மூன்று வர்த்தக நாட்களாக ஏற்றம் தொடரும் நிலையில், இந்தியப் பங்குச் சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் வரலாறு காணாத உச்சம் தொட்டது. தொடர்ந்து பங்குச் சந்தை வர்த்தகத்தில் பாசிட்டிவ் வைப் நீடிப்பது முதலீட்டார்களுக்கு உத்வேகம் தந்து வருகிறது.
முற்பகல் 11.20 மணியளவில் சென்செக்ஸ் 202.37 புள்ளிகள் (0.24%) உயர்ந்து 84,746.68 ஆகவும், நிஃப்டி 98.20 புள்ளிகள் (0.38%) உயர்ந்து 25,889.15 ஆகவும் ஏற்றம் கண்டிருந்தது. காரணம் என்ன? அமெரிக்க ஃபெடரல் வங்கி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வட்டி விகிதத்தை சமீபத்தில் குறைத்தது, சர்வதேச அளவிலான பங்கு வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க பங்குச் சந்தையில் கலவையான போக்கு நிலவினாலும் கூட, ஆசிய பங்குச் சந்தைகளான சியோல், ஷாங்காய் மற்றும் ஹாங்காங்கில் தொடர்ந்து ஏற்றம் நிலவி வருகிறது. குறிப்பாக, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வம் தொடர்ந்து மிகுதியாகி இருப்பதும் இந்தியப் பங்குச் சந்தை ஏற்றத்துக்கு முக்கியக் காரணம் ஆகும்.
ஏற்றம் காணும் பங்குகள்:
எஸ்பிஐ மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பாரதி ஏர்டெல் அல்ட்ரா டெக் சிமென்ட்ஸ் டாடா ஸ்டீல் கோடக் மஹிந்திரா பேங்க் நெஸ்லே இந்தியா ஐடிசி
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் சன் பார்மா ஆக்சிஸ் பேங்க் டிசிஎஸ் பஜாஜ் ஃபைனான்ஸ் எல் அண்ட் டி ஏசியன் பெயின்ட்ஸ் ரூபாய் மதிப்பு இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 பைசா உயர்ந்து ரூ.83.46 ஆக இருந்தது.
0 Comments