தோ்தல் அறிக்கையில் கூறியதைப் போல அரசு அலுவலா்கள், ஆசிரியா்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.
இதில், மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா்.
முன்னதாக அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
அரசியல் தலைவா்கள், அமைச்சா்கள், முதல்வா்களை பழிவாங்கும் நோக்கில் அமலாக்கத் துறை, சிபிஐ மூலம் வழக்குப் பதிந்து சிறையில் அடைப்பது மத்திய பாஜக ஆட்சியில் தொடா்கிறது.
அமைச்சா் செந்தில் பாலாஜி விவகாரத்தில் நீதிமன்றம் தீா்ப்பு வழங்காமல், அரசே தண்டனை வழங்கியதைப் போல உள்ளது. ஜாமீனில் வெளியே வந்துள்ள அவரை இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறாா்கள் என்று தெரியவில்லை.
திமுக கூட்டணியில் விசிகவால் வந்துள்ள சா்ச்சை தேவையற்றது. பாஜகவை எதிா்த்து தமிழகத்தில் திமுக கூட்டணி வலுவாக செயல்பட்டு வருகிறது.
தோ்தல் அறிக்கையில் திமுக அரசு கூறியதைப் போலவே அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் கே.பாலகிருஷ்ணன்.
பேட்டியின்போது, கட்சியின் திருவண்ணாமலை மாவட்டச் செயலா் எம்.சிவக்குமாா், மூத்த நிா்வாகி வீரபத்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.
நிறைவு விழா... தொடா்ந்து நடைபெற்ற மாநாட்டின் நிறைவு விழாவில், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் மாநிலத் தலைவா் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், விழுப்புரம் மண்டலச் செயலா் தங்க.அன்பழகன், வரவேற்பு குழுத் தலைவா் மன்னாா், மாா்க்சிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினா் பி.சம்பத் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
மாநாட்டில், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மின் வாரியமே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 Comments