கோவை: கோவையில் இயங்கி வரும் காக்னிசண்ட் (Congnizant) ஐடி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் Hybrid முறையில் வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்திலும், 2 நாட்கள் வீட்டில் இருந்தும் பணி செய்யலாம்.
நம் நாட்டில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக காக்னிசண்ட் (Cognizant Technology Solutions Corporation) இயங்கி வருகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் தற்போது அடுத்தடுத்து இந்த நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் என்பது வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது கோவை காக்னிசண்ட் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. Cognizant வேலைவாய்ப்பு.. வாரத்தில் 3 நாள் மட்டுமே அலுவலகம் சென்றால் போதும்.. கோவையில் பணி.. தற்போதைய அறிவிப்பின்படி காக்னிசண்ட் நிறுவனத்தில் ப்ராசஸ் எக்ஸிக்கியூட்டிவ் (Process Executive) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்ட உள்ளனர். இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இருப்பினும் பிஇ, பிடெக், பிசிஏ, எம்சிஏ, எம்பிஏ, எம்எஸ்சி படித்தவர்களை தவிர மற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம். HCL வேலைவாய்ப்பு.. சென்னை, கோவை, மதுரையில் காத்திருக்கும் பணி! அனுபவம் வேண்டாம்.. ரெடியா? விண்ணப்பம் செய்வோர் அமெரிக்காவின் Inbound/Outbound கால்ஸ் பேசிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். எம்எஸ்ஆபிஸ் அறிவு பெற்றிருக்க வேண்டும்.வெவ்வேறு ஷிப்ட்டுகளில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும். மேலும் டீம் பிளேயராக இருக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஆங்கிலத்தில் நன்றாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
0 Comments