(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

Vellore Jobs: வேலூரில் ரூ.50,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு; 8-ம் வகுப்பு முதல் டிகிரி வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்


 District Court Recruitment 2024 : வேலூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணையத்தின் கீழ் இயங்கிவரும் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு அலுவலகத்திற்கு டெபியூட்டி தலைமை சட்ட உதவி வழக்கறிஞர், சட்ட உதவி வழக்கறிஞர், அலுவலக உதவியாளர்/ கிளார்க், வரவேற்பாளர் கூடிய டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் (Typist) மற்றும் அலுவலக பியூன் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும். இப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்கு எடுக்கப்படுகிறது.



பணியின் விவரங்கள் :

பதவியின்பெயர்காலிப்பணியிடங்கள்
டெபியூட்டி தலைமை சட்ட உதவி வழக்கறிஞர்1
உதவி சட்ட உதவி வழக்கறிஞர்3
அலுவலக உதவியாளர்/ கிளார்க்1
வரவேற்பாளர் கூடிய டேட்டா எண்டரி ஆப்ரேட்டர்1
அலுவலக பியூன்3

வயது வரம்பு :
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பப்பதார்கள் 21 வயதிற்கு கீழ் இருக்கக்கூடாது.




சம்பள விவரம் :

  • டெபியூட்டி தலைமை வழக்கறிஞர் பதவிக்கு ரூ.50,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • உதவி சட்ட உதவி வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30,000 சம்பளமாக வழங்கப்படும்.
  • அலுவலக உதவியாளர்/ கிளார்க் பதவிக்கு ரூ.20,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • வரவேற்பாளர் கூடிய டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவிக்கு மாதம் ரூ.17,000 சம்பளமாக வழங்கப்படும்.
  • அலுவலக பியூன் வேலைக்கு ரூ.12,000 சம்பளமாக வழங்கப்படும்.

கல்வி மற்றும் இதர தகுதிகள்:

  • டெபியூட்டி தலைமை வழக்கறிஞர் மற்றும் உதவி சட்ட உதவி வழக்கறிஞர் ஆகிய பதவிகளுக்கு சட்டம் படித்த வழக்கறிஞர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • டெபியூட்டி தலைமை வழக்கறிஞர் குற்றவியல் சட்டத்தில் 7 ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 20 குற்றவியல் விசாரணைகளை மேற்கொண்டு இருக்க வேண்டும்.
  • உதவி சட்ட உதவி வழக்கறிஞர் பதவிக்கு 1 முதல் 3 ஆண்டுகள் குற்றவியல் சட்டத்தில் அனுபவம் தேவை.
  • அலுவலக உதவியாளர்/ கிளார்க் பதவிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். கணினி திறன் தேவை.
  • வரவேற்பாளர் கூடிய டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவிக்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் தகவல் தொடர்பு திறன் தேவை.
  • அலுவலக பியூன் பதவிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை :
இப்பணியிடங்கள் தகுதியானவர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.விண்ணப்பிக்கும் முறை :

இப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் https://vellore.dcourts.gov.in/ என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான ஆவணங்களை இணைத்து தபால் வழியாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் :

விவரம்முக்கிய நாட்கள்
விண்ணப்பிக்க கடைசி நாள்10.09.2024
நேர்காணல்பின்னர் அறிவிக்கப்படும்
திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் கீழ் உள்ள இப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் தகுந்த ஆவணங்களுடன் மேல் குறிப்பிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கவும்.


Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations