Advertisement

Responsive Advertisement

ஹெச்டிஎஃப்சி வங்கி முதல் பெடரல் வங்கி வரை அலர்ட்டாக இருக்க வேண்டிய பங்குகள்....


வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகளின் வர்த்தகம் எப்படி இருக்கும் என பலரும் காத்திருக்கின்றனர். ஏனெனில் கடந்த 7 நாட்களாக பங்குச்சந்தை பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளன. அதாவது சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் 4 சதவிகிதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளன. இந்த சரிவு இனி வரும் நாட்களிலும் தொடரும் என பங்குச்சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.




வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகளின் வர்த்தகம் எப்படி இருக்கும் என பலரும் காத்திருக்கின்றனர். ஏனெனில் கடந்த 7 நாட்களாக பங்குச்சந்தை பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளன. அதாவது சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் 4 சதவிகிதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளன. இந்த சரிவு இனி வரும் நாட்களிலும் தொடரும் என பங்குச்சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் எந்தெந்த பங்குகளின் மீது கூடுத கவனம் செலுத்த வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
ஹெச்டிஎஃப்சி வங்கி

ஹெச்டிஎஃப்சி வங்கி 2024-25 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் சந்தை எதிர்பார்ப்புகளை விஞ்சி, ரூ.1.2 டிரில்லியன் டெபாசிட் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. வங்கியின் டெபாசிட்கள் தொடர்ச்சியாக 5.1 சதவீதம் அதிகரித்து, மொத்த வைப்பு ரூ.25 டிரில்லியன் உள்ளது. ஆண்டு அடிப்படையில் 15.1 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்த முன்பணம் ரூ.25.19 டிரில்லியனாக இருந்தது. ஆண்டுக்கு 7 சதவீத உயர்ந்துள்ளது.





டைட்டன்

தங்கம் இறக்குமதிக்கான சுங்க வரி குறைப்புக்குப் பிறகு, நுகர்வோர் தேவை அதிகரித்ததன் காரணமாக, இந்த ஆணு உள்நாட்டு செயல்பாடுகள் ஏறக்குறைய 25 சதவீதம் அதிகரித்துள்ளன. அதன் நகைப் பிரிவில் வலுவான செயல்திறனைப் பதிவுசெய்துள்ளது. சாலிடர் அல்லாத பதிக்கப்பட்ட பிரிவு அதிக இரட்டை இலக்கங்களில் வளர்ந்தாலும், விலை ஏற்ற இறக்கம் மற்றும் தேவை, விநியோகத்தில் உள்ளன. Titan's Watches and Wearables பிரிவு ஆண்டுதோறும் 19 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மேலும் EyeCare இன் உள்நாட்டு வணிகம் 6 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கூடுதலாக, தனீராவின் வருவாய் 11 சதவிகிதம் ஆண்டு வளர்ச்சியைக் கண்டது.

IndusInd வங்கி

IndusInd வங்கியின் நிகர அட்வான்ஸ் ஆண்டு அடிப்படை 13 சதவீதம் மற்றும் தொடர்ச்சியாக 3 சதவீதம் அதிகரித்து ரூ.3.56 லட்சம் கோடியாக உள்ளது. ஜூன் மாதத்தில் இருந்து டெபாசிட்கள் 15 சதவீதம் மற்றும் 4 சதவீதம் அதிகரித்து ரூ.4.12 லட்சம் கோடி நிலையை உயர்ந்துள்ளது.



ஆர் இ சி

2024-25ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் கடன் வழங்கல்கள் ரூ.90,955 கோடி ஆர் இ சி தெரிவித்துள்ளது. இது ஆண்டுக்கு 20.1 சதவீத அதிகமாகும். இந்த வழங்கல்களில் கணிசமான பகுதி க்ரீன் எனர்ஜி கடன்கள் ஆகும். மேலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கான கடன் வழங்கும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.


பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் எனப்படும் எல் ஐ சி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா
வங்கியில் தனது பங்குகளை அதிகரித்துள்ளது. இது தகுதிவாய்ந்த நிறுவன முதலீடு மூலமாக பங்குகளை வாங்கியுள்ளது. தற்போது பாங்க் ஆஃப் மகாராஷ்ஷரா வங்கியில் எல் ஐ சியின் பங்கு விகிதம் 4.05 சதவீதத்திலிருந்து 7.10 சதவீதமாக உயர்ந்துள்ளது. எல்ஐசி 3.376 சதவீத பங்குகளை சராசரியாக ரூ. 57.36 விலையில் வாங்கியது.



பெடரல் வங்கி

பெடரல் வங்கியின் மொத்த வைப்புத்தொகை ஆண்டுக்கு 15.6 சதவீதமும், தொடர்ச்சியாக 1.1 சதவீதமும் அதிகரித்து ரூ.2.69 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அட்வான்ஸ் ஆண்டுக்கு 19.3 சதவீதம் மற்றும் தொடர்ச்சியாக 4.3 சதவீதம் அதிகரித்து ரூ.2.33 லட்சம் கோடியாக இருந்தது. CASA விகிதம் 30 சதவீதமாக இருந்தது, கடந்த ஆண்டு 31.17 சதவீதத்திலிருந்தும், ஜூன் மாதத்தில் 29.27 சதவீதமாக இருந்தது.

கோத்ரெஜ் ப்ராப்பர்டீஸ்

2024-25ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ.13,800 கோடிக்கும் அதிகமான முன்பதிவுகளுடன் வலுவான விற்பனை செயல்திறனை கோத்ரெஜ் ப்ராப்பர்டீஸ் தெரிவித்துள்ளது. பிரீமியம் வீடுகளுக்கான தேவை அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. 2024-25ம் நிதியாண்டில் விற்பனை இலக்கு ரூ.27,500 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations