இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் திங்கட்கிழமையான இன்று (14-10-2024) நல்ல ஏற்றத் தொடக்கம் கண்டுள்ளன. சென்செக்ஸ் சுமார் 530 புள்ளிகள் ஏற்றம் கண்டன. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 25,100 புள்ளிகளைக் கடந்தது. மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:16 மணி நிலவரப்படி, 458 புள்ளிகள் உயர்ந்து 81,839.15 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 139 புள்ளிகள் உயர்ந்து 25,102.80 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று 465 புள்ளிகள் உயர்ந்து 51,637.20 புள்ளிகளாக வர்த்தமாகி வருகிறது. தேசியப் பங்குச் சந்தையின் ஐடி குறியீடு சுமார் 100 புள்ளிகளும் அதிகரித்து 42,434.80 புள்ளிகளாக உள்ளது. பிஎஸ்இ ஸ்மால் கேப் இன்று சற்றே பின்னடைந்து 56,594 புள்ளிகளாக உள்ளன. காரணம்: எஃப்.எம்.சி.ஜி., மீடியா, மற்றும் ஃபார்மா செக்டார்களும், பிஎஸ்இ ஸ்மால் கேப் பெரிய எழுச்சி காணவில்லை என்றாலும் மற்ற செக்டார்கள் ஏற்றம் கண்டு வருவதால் பங்குச் சந்தை இன்று நல்ல தொடக்கம் கண்டுள்ளது.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
பிஎஸ்இ லிமிடெட் சிடிஎஸ்எல் ஜொமாட்டோ விப்ரோ
இறக்கம் கண்ட பங்குகள்:
மாருதி சுசூகி அவென்யூ சூப்பர் மார்க்கெட் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு டாலருக்கு நிகரான
இந்திய ரூபாயின் மதிப்பு
மேலும் பலவீனமடைந்து டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.84.07 ஆக உள்ளது.
0 Comments