(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Advertisement

Responsive Advertisement

UPSC CAPF: மத்திய ஆயுதபடை வேலை வாய்ப்பு; 506 பணியிடங்கள்; டிகிரி முடித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!


 UPSC CAPF; மத்திய ஆயுதப்படை பிரிவுகளில் 506 அசிஸ்டெண்ட் கமாண்டண்ட் பணியிடங்கள்; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்


மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) மத்திய ஆயுத படைப் பிரிவுகளில் (CENTRAL ARMED POLICE FORCES (ASSISTANT COMMANDANTS)) காலியாக உள்ள உதவி கமாண்டண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 506 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 21.05.2024க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.


ASSISTANT COMMANDANTS 


காலியிடங்களின் எண்ணிக்கை – 506


காலியிட விவரம்


Border Security Force (BSF) - 186


Central Reserve Police Force (CRPF) - 120


Central Industrial Security Force (CISF) - 100


Indo-Tibetan Border Police (ITBP) – 58


Sashastra Seema Bal (SSB) - 42



கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


வயதுத் தகுதி: 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.


தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.upsconline.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 


விண்ணப்பக் கட்டணம்: ரூ 200. இருப்பினும் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. 


விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.05.2024 


இது தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://upsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையை பார்வையிடவும்.



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations