சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிங்க!
ராணிப்பேட்டை சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
03 Sep 2024 15:20 IST
ராணிப்பேட்டை மாவட்ட இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 04.09.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Assistant cum Data Entry Operator
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 11,916
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ranipet.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
0 Comments