Advertisement

Responsive Advertisement

Madurai Power Shutdown (26.09.2024): மதுரை மக்களே அலெர்ட்... மாநகரில் எங்கெல்லாம் மின்தடை தெரியுமா?


Madurai Rural Power Shutdown: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (25.09.2024) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 


ஆனையூர் பகுதி
 
மதுரை ஆனையூர் துணை மின்நிலையத்தில் (26.9.2024 வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே ஆனையூர் துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான பாலமேடு மெயின் ரோடு, சொக்கலிங்க நகர் 1 முதல் 7-வது தெரு வரை, பெரியார்நகர், அசோக்நகர், ரெயிலார்நகர், ஹவுசிங் போர்டு, சிலையனேரி, புது விளாங்குடி, கூடல் நகர், ஆர்.எம்.எஸ். காலனி, சொக்கநாதபுரம், ராஜ்நகர், பாத்திமா கல்லூரி, பாத்திமா கல்லூரி எதிர்புறம், பழைய விளாங்குடி, சக்தி நகர்,துளசிவீதி, திண்டுக்கல் மெயின் ரோடு, விஸ்தார குடியிருப்பு, பரவை சந்தை, தினமணி நகர், கரிசல்குளம், அகில இந்திய வானொலி நிலையம், பாசிங்காபுரம், வாகைக்குளம், கோவில்பாப்பாகுடி பிரிவு, லட்சுமிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

 

பழங்காநத்தம்
 
பழங்காநத்தம் துணைமின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக அதிலிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான திருவள்ளுவர் நகர் முழுவதும், ஆர்.சி. தெரு ஒருபகுதி, டி.பி.கே. ரோடு ( சரவணா ஸ்டோர் முதல் இ.எஸ்.ஐ.ஆஸ்பத்திரி வரை), யோகியார் நகர் பகுதி, தண்டல்காரன்பட்டி ஒரு பகுதி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 26.9.2024 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.
 
அதே போல் 27.9.2024 அன்று பசுமலை ஒரு பகுதி மட்டும்
 
மூட்டா தோட்டம், முட்டா காலனி, நிலா நகர், கோபால்சாமி நகர், ஐக்காதேவி தெரு, சூரியகாந்தி தெரு, விநாயகர் மேற்கு ஒரு பகுதி மட்டும் மின் தடை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations