Advertisement

Responsive Advertisement

சமூக நலத் துறை வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!


 கரூர் மாவட்ட சமூக நலத் துறை வேலை வாய்ப்பு; 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

14 Jun 2024 10:10 IST

author-image

Listen to this article

கரூர் மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காவலர்/ ஓட்டுனர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 28.06.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 


காவலர்/ ஓட்டுனர்


காலியிடங்களின் எண்ணிக்கை : 1


கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் இருத்தல் வேண்டும்.


வயதுத் தகுதி : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.


சம்பளம் : 12,000



தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://karur.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். 


முகவரி : மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், கரூர் 


விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.06.2024


இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://karur.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.


“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“



Post a Comment

0 Comments

Joint our WhatsApp

Joint our WhatsApp
Get On Goverment Informations